அட்டனில் அலைகடலென திரண்ட திகாவின் படை - மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (28.07.2024) ஹட்டன் நகரில் நடைபெற்றது.

அட்டனில் அலைகடலென திரண்ட திகாவின் படை - மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (28.07.2024) ஹட்டன் நகரில் நடைபெற்றது.

பகல் 12.00 மணியளவில் ஹட்டன் நகரின் மத்தயில் ஆரம்பமான ஊர்வலம் ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்தை சென்றடைந்து அங்கு பொதுக் கூட்டம் இடம்பெற்றது.

இந்த போராட்டத்தில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஸ்ணன், பழனி திகாம்பரம், மயில்வாகனம் உதயகுமார், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.ராஜாராம், சோ.ஸ்ரீதரன் ராம் மற்றும் மலையக மக்கள் முன்னணி மலையக தொழிலாளர் முன்னணியின் முன்னாள் பிரதேச சபை  உறுப்பினர்கள் அங்கத்தினர்கள் உட்பட பெருந்தோட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

(செய்தி - நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு)