ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொது மாநாடு இன்று

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொது மாநாடு இன்று

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பொது மாநாடு இன்று (15) நடைபெறவுள்ளது.

கட்சியின் மாநாடு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதில் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

அடுத்த வருடம் தேர்தல் ஆண்டாக இருப்பதால் கட்சியை பலப்படுத்துதல் உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் இந்த ஆண்டு மாநாட்டை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.