டயானாவின் உறுப்புரிமை நீக்கம் தொடரடபான மனு ஒத்திவைப்பு
நீதியரசர் குமுதுனி விக்கிரமசிங்க இல்லாத காரணத்தினால், நீதிபதி காமினி அமரசேகர தலைமையிலான உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு , பெப்ரவரி 9ஆம் திகதிக்கு மனுவை ஒத்திவைத்தது.
தம்மை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானத்தை எதிர்த்து இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும் உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வானது, மூன்று நீதிபதிகளில் ஒருவரின் உடல்நிலை பாதிப்படைந்ததால் ஒத்திவைக்கப்பட்டது.
நீதியரசர் குமுதுனி விக்கிரமசிங்க இல்லாத காரணத்தினால், நீதிபதி காமினி அமரசேகர தலைமையிலான உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு , பெப்ரவரி 9ஆம் திகதிக்கு மனுவை ஒத்திவைத்தது.
08 ஒக்டோபர் 2021 திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம் கட்சி டயானாவுக்கு உறுப்புரிமை நீக்கம் குறித்து அறிவித்தது, இது SJB இன் அரசியலமைப்பை மீறும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
கட்சி உறுப்புரிமையிலிருந்து தம்மை நீக்கிய கட்சியின் தீர்மானம் சட்டவிரோதமானது மற்றும் இயற்கை நீதிக்கு முரணானது என கமகே குறிப்பிட்டுள்ளார்.
டயானா கமகே சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, சட்டத்தரணி ஷஹீதா பாரி, மெஹ்ரான் கரீம் மற்றும் அமில பெரேரா ஆகியோரும், SJB தலைவர் சஜித் பிரேமதாசவுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி ஃபைஸ் முஸ்தபா மற்றும் சட்டத்தரணி கீர்த்தி திலேகரட்ன ஆகியோர் ஆஜராகினர்.
Editor