ஷிரான் பாஷிக்கின் மகன் கைது

பிரபல போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாஷிக்கின் மகன் நதீன் பாஷிக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷிரான் பாஷிக்கின் மகன் கைது

பிரபல போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாஷிக்கின் மகன் நதீன் பாஷிக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று (27) இரவு டுபாய் இலிருந்து நாடு திரும்பிய போதே பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் போதைப்பொருள் வலையமைப்பின் ‘God Father’ எனக் கருதப்படும் ஷிரான் பாஷிக், இலங்கைக்கு போதைப்பொருள் விநியோகிக்கும் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரராக அறியப்படுகிறார்.

பெப்ரவரி 16 ஆம் திகதி வெள்ளவத்தை வீடமைப்புத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கடமையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவருக்கு ஆபத்தை ஏற்படுத்திய பின்னர் கைது செய்யப்பட்ட அவரது மகன் நாதின் பாஷிக் துபாயில் தலைமறைவாகியிருந்தார்.