52 மருந்துகளுக்கு தட்டுப்பாடு

அரசாங்க வைத்தியசாலைகளில் 52 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

52 மருந்துகளுக்கு தட்டுப்பாடு

அரசாங்க வைத்தியசாலைகளில் 52 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டு வருவதாகவும், காணாமல் போன மருந்துகளுக்கு மாற்று மருந்துகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

அனைத்து உயிர்காக்கும் மருந்துகளும் வைத்தியசாலைகளில் உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் தேசிய நிலையமொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

சுகாதாரத்துறை தொடர்பான ஒன்பது சட்டமூலங்கள் எதிர்காலத்தில் முன்வைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

மருத்துவ திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.