விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல் 

இரண்டு விளையாட்டு சங்கங்கள் மற்றும் 03 விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை தற்காலிகமாக இடைநிறுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல் 

இரண்டு விளையாட்டு சங்கங்கள் மற்றும் 03 விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை தற்காலிகமாக இடைநிறுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

1973 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டம் திருத்தம் மற்றும் 32 ஆவது சரத்தின் கீழ் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இடைநிறுத்தப்பட்ட விளையாட்டு சங்கங்கள் மற்றும் சம்மேளனங்கள் பின்வருமாறு

*இலங்கை வில்வித்தை சங்கம்
*இலங்கை கபடி சம்மேளனம்
*இலங்கை மல்யுத்த சம்மேளனம்
*இலங்கை ப்ரிஜ் சம்மேளனம்
*இலங்கை தேசிய சக்கர காலணி சங்கம்