இ.தொ.கா ரணிலை ஆதரிக்க முடிவு - பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு!

இலங்கை தொழிலார் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஆலோசனைகள் நடத்திவருவதாக அறிய முடிகிறது

இ.தொ.கா ரணிலை ஆதரிக்க முடிவு - பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு!

இலங்கை தொழிலார் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.

இதொகாவின் தேசிய சபை இன்று கொட்டகலை சி.எல்.எப். வளாகத்தில் கூடியது.

இந்த நிலையில் தேசிய சபையில் ரணில் விக்ரமசிங்கவுக்கே இதொகா ஆதரவளிக்க வேண்டுமென பெரும்பான்மையான உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டது.

அதன் பிரகாரம் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க இதொகா முடிவுசெய்துள்ளது.

இன்று (18) முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இ.தொ.க. தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன் ஆகியோர் இணைந்து இதனை அறிவித்தனர்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் ஆராய்ந்து இறுதி முடிவு எடுப்பதற்காக இன்று (18) முற்பகல் 12.00 மணிக்கு கொட்டகலையில் அமைந்துள்ள சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் தேசிய சபை கூடியது.

இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. தேசிய சபை உறுப்பினர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டது. அதன் பின்னரே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தேசிய சபை கூட்டம் முடிவடைந்த பின்பே தேசிய சபையில் எடுக்கப்பட்ட மேற்படி முடிவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமைகள் இதனை அறிவித்தனர்.

(க.கிஷாந்தன்)