நிறுவன தலைவர் பதவிகளை இராஜினாமா செய்த திலித் ஜயவீர
தற்போது முழு நேர அரசியலில் பிரவேசித்துள்ள திலித் ஜயவீர எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ‘மவ்பிம ஜனதா கட்சியின்’ தலைவராக போட்டியிட தீர்மானித்துள்ளதுடன் அதற்கான பிரச்சாரங்களையும் ஆரம்பித்துள்ளார்.
பிரபல தொழிலதிபர் திலித் ஜயவீர, 2024 ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் தலைவர் மற்றும் நிர்வாக சபை உறுப்பினராக உள்ள அனைத்து நிறுவனங்களிலிருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.
அதன்படி, ‘தெரண’ சேனலை நடத்தி வரும் ‘பவர்ஹவுஸ்’ நிறுவனம், ‘அருணா’ நாளிதழை நடத்தி வரும் ‘லிபர்ட்டி பப்ளிஷர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ உள்ளிட்ட 24 நிறுவனங்களில் இருந்து அவர் ராஜினாமா செய்துள்ளார்.
தற்போது முழு நேர அரசியலில் பிரவேசித்துள்ள திலித் ஜயவீர எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ‘மவ்பிம ஜனதா கட்சியின்’ தலைவராக போட்டியிட தீர்மானித்துள்ளதுடன் அதற்கான பிரச்சாரங்களையும் ஆரம்பித்துள்ளார்.
Editor