2025ஆம் ஆண்டுமுதல் மலையக மக்களுக்கு வீடு, காணி உரிமை - ரணிலின் தேர்தல் விஞ்ஞானம்

2025ஆம் ஆண்டுமுதல் மலையக மக்களுக்கு வீடு, காணி உரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டுமுதல் மலையக மக்களுக்கு வீடு, காணி உரிமை - ரணிலின் தேர்தல் விஞ்ஞானம்

2025ஆம் ஆண்டுமுதல் மலையக மக்களுக்கு வீடு, காணி உரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை ஜனாதிபதி ரணில் வெளியிட்டிருந்தார்.

இதில் மலையக மக்கள் தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

லயன் அறைகளில் வாழும் பெருந்தோட்ட மக்களுக்கு நல்ல முறையில் வாழும் சூழலை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். 2025ஆம் ஆண்டுமுதல் காணி மற்றும் வீட்டுரிமையை பெற்றுக்கொடுக்க உள்ளோம்.

பெருந்தோட்டங்களில் உள்ள தரிசு நிலங்களை முறையான திட்டத்தின் கீழ் மேலதிக உற்பத்தி நடவடிக்கைகளுக்காக வழங்க உள்ளோம்.

பெருந்தோட்ட சுகாதார மற்றும் கல்வி கட்டமைப்புகளை விரிவுப்படுத்த உள்ளோம்.” என அவர் கூறியுள்ளார்.