பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு இந்திய அரசு நிதி உதவி!

இந்திய அரசின் 600 மில்லியன் ரூபாய்கள் உதவியுடன் தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு இந்திய அரசு நிதி உதவி!

இந்திய அரசின் 600 மில்லியன் ரூபாய்கள் உதவியுடன் பெருந்தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முன்னதாக இந்திய அரசின் 300 மில்லியன் ரூபாய்கள் உதவியுடன் தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக, 2019.06.04 அன்று இடம்பெற்று அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

இலங்கையில் நிலவிய பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட விலை அதிகரிப்புக்களால், குறித்த கருத்திட்டத்தின் நன்கொடையை 600 மில்லியன் ரூபாய்களாக அதிகரிப்பதற்கு இந்திய அரசு உடன்பாடு தெரிவித்திருந்தமை  குறிப்பிடத்தக்கது