மோடியை வாழ்த்திய இராதா - மனங்களில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார் 

இந்தியாவின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பிரதமர் மோடியின் வெற்றி தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இராதாகிருஸ்ணன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மோடியை வாழ்த்திய இராதா - மனங்களில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார் 

மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளமை இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். இது ஒரு சாதனையாகும். எத்தனை கூட்டணி எதிர்த்து நின்றாலும் அவற்றையெல்லாம் உடைத்தெறிந்து மக்களின் மனங்களில் நீங்காத இடம்பிடித்து விட்டார் பிரதமர் நரேந்திர மோடி என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பிரதமர் மோடியின் வெற்றி தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இராதாகிருஸ்ணன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

''இந்தியாவின் அனைத்து எதிர் கட்சிகளும் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து மோடியை தோற்கடிப்பதற்காக செயற்பட்ட போதிலும் அதனை எல்லாம் தகர்த்தெறிந்து மக்களின் வாக்குகளை பெற்று மூன்றாவது முறையாகவும் பிரதமராக வெற்றி பெற்றிருக்கின்றமையானது அவருடை சேவைக்கும் மக்கள் அவர் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கைக்கும் கிடைத்த ஒரு வெற்றியாகும்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டுமல்லாது உலக நாடுகளில் இந்தியாவின் பெயரையும் புகழையும் அதன் பொருளாதாரத்தையும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ள பெருமை அவரையே சாரும்.

இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்த பொழுது உடனடியாக உதவிகளை செய்து எங்களுக்கு உணவளித்தவர் பிரதமர் மோடி என்று சொன்னால் அது மிகையாகாது.அது மாத்திரமன்றி இன்னும் பல உதவிகளை இன்றும் செய்து வருகின்றார்.'' என்றும் இராதாகிருஸ்ணன் கூறியுள்ளார். 

(செய்தி - நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு)