சேவல் சின்னத்தில் இ.தொ.கா போட்டி - ரணிலிடம் கூறிய ஜீவன்

சேவல் சின்னத்தில் இ.தொ.கா போட்டி - ரணிலிடம் கூறிய ஜீவன்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இ.தொ.காவின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் கூறிய உள்ளதாக அறிய முடிந்தது.

ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று நடத்திய சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

யானை சின்னத்தில் போட்டியிட்டால் கூட்டணியில் இணைந்து போட்டியிட தயார் என்றும், வேறு சிலிண்டர் சின்னமாயின் போட்டியிட முடியாதெனவும் ஜீவன் கூறியுள்ளதாக தெரியவருகிறது.