சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பது தொடர்பில் எதிர்க்கட்சிகள் ஆராய்ந்துவருகின்றன.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பது தொடர்பில் எதிர்க்கட்சிகள் ஆராய்ந்துவருகின்றன.
நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்கள் உள்வாங்கப்படாமல் அதனை அரசாங்கம் நிறைவேற்றியிருந்தது.
இந்தச் சட்டம் உயர்நீதிமன்றத்தின் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படாமையால் நிறைவேற்றப்பட்டமை அரசியலமைப்புக்கு முரணானது எனக் குற்றம் சுமத்தியுள்ள எதிர்க்கட்சிகள், சட்டத்தை சான்றுப்படுத்திய சபாநாயகருக்கும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கு முரணாக சபாநாயகர் செயற்பட்டுள்ளார் என எதிரணிகள் குற்றஞ்சாட்டி, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர ஆலோசித்து வருகின்றன.
Editor