கிரிக்கெட் வளர்ச்சியடைய தற்காலிக தீர்வுகள் சாத்தியமில்லை - அலி சப்ரி
கிரிக்கட்டில் வேரூன்றியுள்ள அடிமட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றுக்கு தற்காலிக தீர்வுகள் கொடுப்பதன் மூலம் மட்டும் எந்த தீர்வும் கிடைக்கப்போவதில்லை
ICC உலகக்கிண்ணம் 2023 மற்றும் ICC T20 என்பவற்றின் சமீபத்திய எதிர்பார்ப்புகள் என்பது வருத்தமளிப்பதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கிரிக்கட்டில் வேரூன்றியுள்ள அடிமட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றுக்கு தற்காலிக தீர்வுகள் கொடுப்பதன் மூலம் மட்டும் எந்த தீர்வும் கிடைக்கப்போவதில்லை.
கிரிக்கட்டை தனியார் வியாபாரமாக மாற்றியுள்ள நபர்களின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து அதனை தொழில்சார் பிரவேசமாக மாற்றவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிரிக்கட் தொடர்பில் தேடிப்பார்க்க நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவின் தலைவர் என்ற வகையில் இந்த கிரிக்கட்டில் பாரிய மாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Editor