2022 நிலைமை மீண்டும் 2028 இல் ஏற்படும்
நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றமை வெளிக்கொணரப்பட்டுள்ளதாகவும் எனவே பொருளாதார வளர்ச்சி வேகத்தை பேணிச் செல்ல முடியாதவிடத்து 2022 இல் ஏற்பட்ட நிலைமை மீண்டும் 2028 இல் ஏற்படும் என்பதுடன் இதனால் மக்களும் நெருக்கடிகளை சந்திக்க வேண்டி ஏற்படும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எனவே இன, மத, சாதி, வர்க்கம் மற்றும் கட்சி பேதங்களை கடந்து சகல மக்களும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் பயணத்தில் ஒன்றிணைய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் எதிர்க்கட்சி தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Editor